விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகள், ஏழு பேரூராட்சிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூடத்தில் கலந்துக்கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து பெரிய கட்சிக்கு வாக்களித்து வருகிறீர்கள் ஆனால் மக்கள் வாழ்க்கை தரம் முன்னேறவில்லை. மோடி ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது, இந்த எட்டு ஆண்டில் ஒரு மணிதனின் வாழ்க்கையை முழுமையாக மாற்றியிருக்கிறது மோடி அரசு. 2014ஆண்டு முன்பு வரை தமிழகத்தில் ஒரு கழிப்பறை கட்டுவதென்றால் கூட தாஜ்மகால் கட்டுவது போல் இருந்தது. தமிழகத்தில் 2014 முதல் இதுவரை 57 லட்சம் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்துள்ளது. முத்ரா திட்டத்தின் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன.
மத்திய அரசு 48 ரூபாய்க்கு அரிசி வாங்குகிறது, மாநில அரசு 2 ரூபாய் கொடுக்கிறது இதனை கொடுக்கும் போது மாநில அரசு கொடுப்பது போல் பில்டப் கொடுக்கிறார்கள். மோடி அரசு கொரோனா காலகட்டத்தில் 80 கோடி பேருக்கு இரண்டு ஆண்டுகளாக இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. 73 சதவீதம் நகை கடன் வைத்திருந்தால் செல்லாது என கூறிவிட்டனர். மேலும் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள் ஆனால் தற்போதுவரை தரவில்லை.
திமுகவின் எட்டு மாத கால ஆட்சி 80 ஆண்டுகால ஆட்சி கொடுக்கும் சலிப்பை கொடுத்துள்ளது. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர், தற்போது தழிழகத்தில் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவது, பேனர்களை கிழிப்பது, வேட்பாளர்களை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது அதற்கு காரணம் தமிழகத்திலேயே திமுகவின் தவறுகளை தட்டிகேட்டு ஊழலை தடுத்து நிறுத்தி வருகிறது பாஜக. ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்துவது தான் பாஜகவின் லட்சியம்.
வளர்ச்சிப் பாதையில் செல்ல ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத பாஜக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த திட்டம் வந்தாலும் அதனை நாங்கள் தான் கொண்டுவந்தோம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்கள். நகராட்சிகளில் 25 கிருஸ்தவர்கள், 8 இஸ்லாமியர்கள் போட்டியிடுகிறனர். சிறுபான்மையினருக்கு திமுகவை விட அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக மக்களை சாதியாக, மதமாக அரசியல் செய்து வருகிறது. கடைசி நாளில் ஓட்டுக்கு பணம் கொடுக்க வருவார்கள் வாங்கிக்கொள்ளுங்கள், அந்த பணம் கமிஷனாக பெற்ற பணம். பணம் கொடுத்து வெற்றி பெற்று விடமால் என நினைக்கிறார்கள் ஆனால் பாஜக அதனை அனுமதிக்காது என்று பேசினார்.
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]