தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் திறக்கப்பட்டு 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்பட்டன.
அதற்கு பிறகு மழை காரணமாக பள்ளிகள் இடையில் மூடப்பட்டன. பின்னர் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு, அதற்கு பிறகு பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் செயல்படும் 6193 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 1758 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 4726 மெட்ரிக் பள்ளிகள், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க நடுநிலைப் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. இவற்றில் படிக்கும் சுமார் 1 கோடியே 10 லட்சம் மாணவ மாணவியர் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிக்கு திரும்பினர். பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அறிவித்த சுழற்சி முறை வகுப்புகள் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாளை பாரத் பந்த்..??? வெளியான அறவிப்பு…ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் […]
- அப்பாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம்… நடிகர் சிம்பு ட்வீட்மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. […]
- கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்தேனி மாவட்டத்தில் கஞ்சாவிற்றவரின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்க உத்தரவுதேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டம் மயிலாடும்பாறைச் […]
- மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்தல்-அதிமுகவில் இழுபறிமாநிலங்களவை எம்.பி வேட்பாளர் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நீடித்திவருகிறது.பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில் […]
- மேயர்… வந்தார், நின்றார், சென்றார்… புஷ்ஷாகி
போன மக்கள் குறைதீர் கூட்டம். மனு அளிக்க வந்தவர்கள் ஏமாற்றம்.மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்சிறப்பு முகாமிற்கு வந்த மேயர் இடையிலேயே சென்றுவிட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.மதுரை மாநகராட்சி […] - பக்தர்கள் மீது தாக்குதல்-கோயில்அர்ச்சகர் அராஜகம்இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவில்( அர்ச்சகர் மாரிசாமியின் […]
- மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம்மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம் ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்த பொதுமக்கள்மதுரை மாநகராட்சி […]
- ஆபாச போஸ்டர்- மக்கள் நீதிமய்ய கட்சியினர் மீது வழக்குமதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற போஸ்டரால் மக்கள் நீதி மய்ய கட்சியினர் மீது இரண்டு காவல்நிலையங்களில் […]
- ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய் தான்…வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் […]
- உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவுக்கு புகழாரம்…சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு […]
- பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னை வருகைநாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் […]
- கோவில் விழாவில் ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… உயர்நீதிமன்ற மதுரை கிளைகோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை […]
- இலங்கையில் அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை உயர்வுஇலங்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்ந்துள்ளது.இலங்கையில் டாலரும் இல்லை,ரூபாயும் […]
- பலாக்கொட்டை பொடிமாஸ்தேவையானவை:பலாக்கொட்டை – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – […]
- 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் கோடை விழா2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சியை அமைச்சர் ஐ. பெரியசாமி […]