முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக திகழ்ந்து வரும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக தை மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தை தெப்பத்திருவிழா 01.02.2022 முதல் 10.02.2022 முடிய நடைபெறவுள்ளது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவானது கடந்து 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக களையிழந்து காணப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டாவது தெப்பத்திருவிழா நடைபெறுமா என்ற ஏக்கத்தில் பக்தர்களும், பொதுமக்களும் இருந்துள்ளனர். அவர்களின் குறையை போக்கும் விதமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிப்பின் படி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தெப்பத்திருவிழாக்கள் சம்மந்தமான அனைத்து நிகழ்வுகளும் உள்திருவிழாக்களாக திருக்கோயில் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெப்பத்திருவிழா நாளை காலை 10.45 மணி முதல் 11 மணிக்குள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.
மேலும் திருவிழா சமயத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி புறப்பாடின் போது பக்தர்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி புறப்பாடுகள் நிகழ்வுகள் அனைத்தும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருக்கோயிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் மட்டுமே நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவிழாவின் 10-வது நாள் தெப்ப உற்சவத்தையொட்டி ஜி.எஸ்.டி ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாரான தெப்ப மிதவையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அப்போது ஏராளமான பக்தர்கள் தெப்ப மிதவையில் இணைக்கப்பட்ட வடத்தினை பயபக்தியுடன் இழுப்பார்கள். தெப்பகுளத்திற்குள் 3 முறை தெப்ப மிதவையானது வலம் வரும். இதேபோல இரவில் மின்னொளியில் வானவேடிக்கைகளுடன் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
அப்போதும் ஏராளமான பக்தர்கள் திரளாக கூடி நின்று அரோகரா கோஷம் முழங்க தெப்ப மிதவையின் வடத்தை பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள். இதனை தொடர்ந்து சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் வளாகத்தில் சூரசம்கார லீலை நடைபெறும். ஆனால் அரசின் நெறிமுறைக்கு உட்பட்டு தெப்பமுட்டுதள்ளுதல், தேரோட்டம், தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவமான தெப்பம் வலம்வருதல், சன்னதி தெருவில் சூரசம்காரம் லீலை தவிர்க்கப்பட்டுள்ளது
- போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைதுஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது […]
- கழுத்து கருமை நீங்க:சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து […]
- டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. […]
- முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு […]
- கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சிசென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை […]
- தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என […]
- ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் […]
- இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சுபல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த […]
- சிந்தனைத் துளிகள்• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். […]
- பொது அறிவு வினா விடைகள்1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 113.உலக […]
- குறள் 215:ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.பொருள் (மு.வ):ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், […]
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]