• Thu. Apr 25th, 2024

பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் இன்று முதல் செலுத்த பள்ளிகளுக்கு உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கட்டணத்தை இன்று முதல் வரும் 20-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது:- தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடமிருந்து (தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவர்களைத் தவிர்த்து) தேர்வுக் கட்டணத்தைப் பெற்று அந்தத் தொகையை வியாழக்கிழமை முதல் ஜன.20-ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு இணையவழியில் செலுத்த வேண்டும். சுயநிதி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு பெறத் தகுதியுடைவர்கள் அல்லர். இணைய வழியில் கட்டணங்கள் செலுத்துவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம். எனவே பிளஸ் 2 பொதுத்தேர்வுக் கட்டணம், அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்த பள்ளிகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *