சிகலா அடுத்தடுத்து என்ன செய்ய போகிறாரோ? என்ற கலக்கம் சூழ்ந்த எதிர்பார்ப்பு அதிமுகவில் அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டு போகும்..
இந்த முறையும் அப்படி ஒரு கலக்கத்தில் அக்கட்சி மேலிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவை சசிகலா கைப்பற்றுவாரா, மாட்டாரா? அதற்காக எப்படி வியூகங்களை வகுக்கப் போகிறார்? என்பது தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது. ஜெயிலில் இருந்து வெளிவந்ததில் இருந்து சசிகலா மென்மையான மற்றும் அமைதி போக்குடன் அரசியல் செய்து வருகிறார்.
அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் சசிகலா.. ஜெ.விடம் 30 வருடம் லாபி செய்தவருக்கு எடப்பாடி & டீமை தன்வசப்படுத்த சசிகலாவுக்கு நன்றாகவே வழிதெரியும்.. ஆனாலும் மென்மை போக்கை, மிக மிக ஜாக்கிரதையாக கடைப்பிடித்து வருகிறார். விடுதலை ஆன பிறகு, ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அதிரடியான முடிவுகளை அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா சூழலால் அமைதி காக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது..
அதன்பிறகுதான் அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக சொல்லி ஷாக் தந்துவிட்டு, மீண்டும் களத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான பிறந்த நாள் அல்லது நினைவு நாள் வரும்போதெல்லாம் சசிகலா ஏதாவது அறிவிப்பு வெளியிடுவாரா? என்று எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் எழுவது வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில் வரும் 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிறது.. இந்த பிறந்த நாளினை, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் விமர்சியாக கொண்டாடவிருக்கிறார்கள். அன்றைய தினமாவது ஏதாவது அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக சசிகலா அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. அல்லது அதிமுக அலுவலகத்திற்கு செல்ல திட்டமிட்டிருப்பாரா? என்ற சந்தேகமும் எழுகிறது.. காரணம், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் சில நிமிடங்கள் தியானம் செய்தது மிகப்பெரிய கவனம் பெற்ற நிலையில், அதேபோன்ற அஸ்திரத்தை சசிகலாவும் எடுக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
ஆனால், சென்னை ராமாவரம் எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் அமைந்திருக்கும் காதுகேளாத வாய்ப்பேச முடியாத பள்ளிக்குழந்தைகளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கி, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு அங்கு செல்ல திட்டமிட்டுள்ளாரா சசிகலா… ஒருவேளை ராமாவரம் தோட்டத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பிருக்கலாம் என்கிறார்கள்..
இன்னொன்றையும் சொல்கிறார்கள், சசிகலா, டிடிவி தினகரன் இடையில் பனிப்போர் நீடித்து வரும் நிலையிர், இவர்களின் உரசலை ஒரு முடிவுக்கு கொண்டு வர முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்களாம்.. எப்படி பார்த்தாலும் பிப்ரவரி 24-ம் தேதி என்றாலே அதிமுக மேலிடத்தின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டதுபோல ஆகிவிடுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஏற்கனவே சசிகலா சுற்றுப்பயணம் செய்ய போவதாக தெரிவித்துவிட்ட நிலையில், அதற்கு முன்னதாக நடக்க போகும் ஜெ.பிறந்த நாள் விழாவில் ஏதோ ஒரு அதிரடி காத்திருக்கிறது என்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.. பார்ப்போம்..!
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]