சிகலா அடுத்தடுத்து என்ன செய்ய போகிறாரோ? என்ற கலக்கம் சூழ்ந்த எதிர்பார்ப்பு அதிமுகவில் அவ்வப்போது எட்டிப்பார்த்துவிட்டு போகும்..
இந்த முறையும் அப்படி ஒரு கலக்கத்தில் அக்கட்சி மேலிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவை சசிகலா கைப்பற்றுவாரா, மாட்டாரா? அதற்காக எப்படி வியூகங்களை வகுக்கப் போகிறார்? என்பது தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது. ஜெயிலில் இருந்து வெளிவந்ததில் இருந்து சசிகலா மென்மையான மற்றும் அமைதி போக்குடன் அரசியல் செய்து வருகிறார்.
அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் சசிகலா.. ஜெ.விடம் 30 வருடம் லாபி செய்தவருக்கு எடப்பாடி & டீமை தன்வசப்படுத்த சசிகலாவுக்கு நன்றாகவே வழிதெரியும்.. ஆனாலும் மென்மை போக்கை, மிக மிக ஜாக்கிரதையாக கடைப்பிடித்து வருகிறார். விடுதலை ஆன பிறகு, ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அதிரடியான முடிவுகளை அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா சூழலால் அமைதி காக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது..
அதன்பிறகுதான் அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக சொல்லி ஷாக் தந்துவிட்டு, மீண்டும் களத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான பிறந்த நாள் அல்லது நினைவு நாள் வரும்போதெல்லாம் சசிகலா ஏதாவது அறிவிப்பு வெளியிடுவாரா? என்று எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் எழுவது வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில் வரும் 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிறது.. இந்த பிறந்த நாளினை, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் விமர்சியாக கொண்டாடவிருக்கிறார்கள். அன்றைய தினமாவது ஏதாவது அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக சசிகலா அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. அல்லது அதிமுக அலுவலகத்திற்கு செல்ல திட்டமிட்டிருப்பாரா? என்ற சந்தேகமும் எழுகிறது.. காரணம், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் சில நிமிடங்கள் தியானம் செய்தது மிகப்பெரிய கவனம் பெற்ற நிலையில், அதேபோன்ற அஸ்திரத்தை சசிகலாவும் எடுக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
ஆனால், சென்னை ராமாவரம் எம்ஜிஆர் இல்ல வளாகத்தில் அமைந்திருக்கும் காதுகேளாத வாய்ப்பேச முடியாத பள்ளிக்குழந்தைகளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கி, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு அங்கு செல்ல திட்டமிட்டுள்ளாரா சசிகலா… ஒருவேளை ராமாவரம் தோட்டத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பிருக்கலாம் என்கிறார்கள்..
இன்னொன்றையும் சொல்கிறார்கள், சசிகலா, டிடிவி தினகரன் இடையில் பனிப்போர் நீடித்து வரும் நிலையிர், இவர்களின் உரசலை ஒரு முடிவுக்கு கொண்டு வர முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்களாம்.. எப்படி பார்த்தாலும் பிப்ரவரி 24-ம் தேதி என்றாலே அதிமுக மேலிடத்தின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டதுபோல ஆகிவிடுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஏற்கனவே சசிகலா சுற்றுப்பயணம் செய்ய போவதாக தெரிவித்துவிட்ட நிலையில், அதற்கு முன்னதாக நடக்க போகும் ஜெ.பிறந்த நாள் விழாவில் ஏதோ ஒரு அதிரடி காத்திருக்கிறது என்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.. பார்ப்போம்..!
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]