நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி தலைவி சிவகாமிக்கு அவரது உதவியாரும், டிரைவருமான சைபுள்ளாவின் கலாட்டாகளால் அவரது பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
நீலகிரியில் நெல்லியாளம் நகராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் சிவகாமி இவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவர் பதவியேற்ற நாள் முதலே நெல்லியாளம் நகராட்சியில் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புவது புதிதல்ல…
நகராட்சி தலைவி சிவகாமி முழுக்க முழுக்க அவரது உதவியாளர் சைபுள்ளா கட்டுபாட்டில் இருப்பதாகவும் அவர்தான் இவரை பின்னிருந்து இயக்குவதாகவும், கூறப்படுகிறது.
எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது பாலியல் குற்றங்களையும், சாதி கொடுமை என கூறி தலைமைக்கும், காவல்துறைக்கும் பொய் புகார்களை அளித்து வீழ்த்திவிடுவார்கள் என பாதிக்கபட்டவர்களே நம்மிடம் தெரிவித்தனர்.

சமீபகாலமாக சைபுள்ளாவின் ஆளுமை உச்சத்தை தொட்டு அடிதடி கலாட்டா என இறங்கியுள்ளராம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட நெல்லியாளம் நகராட்சி நகரமைப்பு அலுவலர் அறிவுடைநம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, இவர் தொடர்பாக அவர் தேவலா காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்த நிலையில் தலைமறைவானார். அதன் ஜாமின் பெற்று வந்த அவர் நேற்று தேவாலா பகுதியில் நெல்லியாளம் நகராட்சி 17வது வார்டுக்கான நகர சபை கூட்டம் அன்னை திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்தில் 17 வார்டு சார்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான நடைப்பாதை, தெருவிளக்கு, தண்ணீர் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை மனுக்களாக ஆணையாளரிடம் வழங்கினார்கள். ஆணையாளர் அவர்களும் உங்களது அனைத்து பிரச்சனைகளும் குறிப்பிட்ட நாளுக்குள் மன்ற கூட்டத்தில் பரிசிலனை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் சைபுள்ளா தன்னை நகர் மன்ற தலைவரின் உதவியாளர் என தன்னை கூறிக்கொண்டு மன்ற கூட்டத்திற்கு வந்து ஆணையாளரிடம் ரகளையில் ஈடுபட்டார். இதற்கு கழக நிர்வாகிகள், மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் சைபுல்லாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடை நகராட்சி தலைவி கோபித்து கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து சைப்புள்ளாவும் வெளியேறினார்.
மேலும் நகராட்சி தலைவி சிவகாமி மீதும் சைப்புள்ளா மீதும் நடவடிக்கை எடுக்க கோரி தலைமைக்கு புகார் மனுக்கள் பறக்க தொடங்கியுள்ளது.
பழங்குடியின மக்களும் மக்கள் பிரதிநிதித்துவம் பெற்று முன்னேற வேண்டும் என்ற நோக்கமே சைப்புள்ள போன்றோரால் முறியடிக்கபட்டு வருவதை முதல்வர் கவனம் செலுத்தி பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெல்லியாளம் மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]