சிங்கம்புணரி காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கோரி தஞ்சம்
சிங்கம்புணரியைச் சேர்ந்த சேவுகமூர்த்தி வயது 23, பரியாமருதிப்பட்டியைச் சேர்ந்த பூமிகா வயது 19, இவர்களுக்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்ததாக தெரிகிறது.
தற்பொழுது சிங்கம்புணரி காவல் நிலையத்தில் இருவரும் பாதுகாப்பு கோரி வந்துள்ளார்கள். பூமிகாவின் காதலை ஏற்க மறுத்த பெற்றோர் எங்கள் பெண்ணை காணவில்லையென்று நெற்க்குப்பை காவல் நிலையத்தில் புகார் அழித்துள்ளனர். இதன் காரணமாக சேவுகமூர்த்தி மற்றும் பூமிகா சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு கோரி வந்துள்ளனர்.