ஆந்திரப் பிரதேசத்தில் வருமான வரித்துறை அலுவலர்கள் போல் தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பழைய குண்டூர், பக்கத்தில் நகரில் எர்ரம்செட்டி கல்யாணி என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் அழகாக உடை அணிந்து மூன்று நபர்கள் வருமான வரித்துறை அலுவலர்களாக காரில் வந்துள்ளனர். திடீரென கல்யாணி வீட்டிற்குள் நுழைந்த அந்த அலுவலர்கள் வீட்டின் கதவை உட்புறமாகத் தாழ்ப்பாள் போட்டுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த அனைவரிடமும் தாங்கள் வருமான வரித்துறையிலிருந்து வருவதாகக் கூறியுள்ளனர்.
மேலும் உங்கள் வீட்டில் ஏராளமான நகை மற்றும் பணத்தைப் பதுக்கி வைத்து இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது நாங்கள் சோதனை செய்வதற்காக வந்திருக்கிறோம் என அனைத்து அறைகளையும் சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்த ஏராளமான சொத்து ஆவணங்கள், ரொக்க பணமாக இருந்த 50 லட்சம், 50 சவரன் நகை, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். நகை மற்றும் பணத்திற்கு உரிய ஆவணங்களை வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டு பொருட்களை மீண்டும் எடுத்துக் கொள்ளுமாறு அவசரமாக அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
வீட்டுக்கு வந்து சோதனை செய்தவர்கள் போலியான வருமான வரித்துறை அலுவலர்கள் எனத் தாமதமாகக் கல்யாணி உணர்ந்துள்ளார். இது குறித்து அவர் பழைய குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வந்தவர்கள் போலியான வருமான வரித்துறை அலுவலர்கள் என்பதை உறுதி செய்துள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் சோதனைக்கு வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது வழக்குப் பதிவு செய்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]
- மதுரை மல்லிகையின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்..,
7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இயக்கம்..!மதுரை மல்லிகைப்பூவின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் உருவாக்கப்படும் […] - படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஜாடி நிறைந்தவுடன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ”ஜாடி நிறைந்து விட்டதா?” அனைத்து மாணவர்களும் கோரஸாக, […]
- கடையநல்லூர் அருகே பாழடைந்த கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலைதென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் பராமரிப்பு பணியின் போது ஐம்பொன்சிலையும், ஒரு […]
- மஞ்சூரில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் […]
- இரவிலும் மக்கள் பணியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுமதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் பகுதி இந்த பகுதியில் இருந்து மாடக்குளம் நோக்கி செல்லக்கூடிய […]
- கே. பாக்யராஜ் வெளியிட்ட
‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!இயக்குநர் சுந்தர் சி யிடம் உதவியாளராக இருந்த வி.எம்.ரத்னவேல் ஒரு புதிய படத்தில் இயக்குநராக அறிமுகம் […] - பொது அறிவு வினா விடைகள்
- குறள் 406உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.பொருள் (மு.வ):கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் […]