சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 900 என விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.15.50 உயர்ந்து தற்போது ரூ. 915.50 என்றாகியுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை, கடந்த ஆகஸ்ட் 17 -ம் தேதி, 25 ரூபாய் உயர்த்தப்பட்டது, அதன்பின் செப்.1 ம் தேதி, 25 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ 900- ஐ கடந்தது. இப்படி இந்த ஓராண்டில் மட்டும் 285 ரூபாய் கேஸ் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது இன்னும் 15 ரூபாய் உயர்ந்து, ரூ.915 என்றாகியுள்ளது.
எனவே, கடந்த ஓராண்டில் சிலிண்டர் விலை ரூ.300 உயர்ந்துள்ளது.