பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்-திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பங்கேற்பு!!
மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு!!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1432 ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் வருவாய் தீர்வாய அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பல்லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை தொடர்பான புகார்கள், பட்டா தொடர்பான புகார்கள், மாற்றுத்திறனாளிகளின் புகார்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனுவாக அளித்தனர். 15 வருடங்களாக பட்டா மற்றும் அளவீடு செய்யாமல் தவித்து வந்த விவசாயி ஒருவர் அளித்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நாளைக்குள் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீண்டும் நாளை நான் நேரில் வந்து ஆய்வு செய்வேன் எனவும் உத்தரவிட்டார். இதேபோன்று பத்து வருடங்களாக பல்லடம் நகராட்சியால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க முடியாமல் தவித்த டயாலிசிஸ் நோயாளியின் குடும்பத்தார் அளித்த மனுவின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் பல்லடம் அருகே கல்லம்பாளையத்தில் 20 நபர்கள் சேர்ந்து 36 பனை மரங்களை ஒரே இரவில் வெட்டி வீசியதாகவும் அதற்கு உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயின் குடும்பத்தினர் அழித்த மனுவின் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பல்லடம் நகராட்சி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அமர இருக்கைகள் வசதி ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் பெயரில் நகராட்சி அதிகாரிகளிடம் chair வாங்க பணம் இருக்கா? இல்லை நான் கொடுக்கவா? என கேட்டதால் பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர். நாளைக்குள் பொதுமக்கள் அமர இருக்கைகள் போட வேண்டும் எனவும் அதை புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற இரண்டாவது நாளே பல்லடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அவர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]