காங்கிரஸ் தலைவராக கார்கே பொறுபேற்றுள்ள நிலையில் புதிய நிர்வாகிகளை நியமிக்க ஏதுவாக அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர்
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளதாக காங்.எம்.பி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். தங்கள் ராஜினாமாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கொடுத்துள்ளனர். புதிய நிர்வாகிகளை கார்கே நியமிக்க ஏதுவாக அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். முன்னதாக காங்கிரஸ் தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.