கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் மாவட்ட அலுவலகத்தில், 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குமரி மாவட்ட மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். நாகர்கோவில் பெரு நகர காங்கிரஸ் தலைவர், மாநகராட்சி உறுப்பினர்கள், வட்டாரம் மற்றும் நகர ஒன்றிய தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.