இணையதள செய்தி ஊடகத்தில் செய்தியாளராக பணிபுரியும் த்ரிஷாவின் 16 வயது நிரம்பிய அண்ணன் மகளுக்கு முகநூல் மூலம் ஒரு சிக்கல் வருகிறது. அதனை சரிசெய்ய முயற்சிக்க முயலும்போது அது உலக அளவிலான இன்னொரு சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது.
அவற்றை த்ரிஷா எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ராங்கி.
படத்தின் பெயருக்கேற்ற வேடம் த்ரிஷாவுக்கு. நடை உடை பாவனைகளில் துணிச்சல்,உடல்மொழியில் ஓர் அலட்சியம், காவல்துறையுடன் அநாயசமான மோதல் என த்ரிஷா நடிப்புக்குபெருமை சேர்க்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன.புல்லட்டில் அவர் பயணிப்பதும் அதிலுள்ள ஒளிப்பதிவுக்கருவியும் சிறப்பு துனிஷியாவில் நடைபெறும் துப்பாக்கிச் சண்டைக்கு நடுவில் த்ரிஷாவின் செயல்கள் அவரை முழுமையான (ஆக்ஷன் ஹீரோயின்) சண்டை நாயகியாக்கியிருக்கின்றன.
த்ரிஷாவின் அண்ணன் மகளாக நடித்திருக்கும் அனஸ்வராராஜனின் அப்பாவித்தனம் அந்த வேடத்துக்குப் பலம்.அவரால்தான் எல்லாமே என்பதை கடைசிவரை உணராத பாத்திரவடிவமைப்பு. அதை உணர்ந்து நடித்து பலம் சேர்க்கிறார்.காவல்துறை அதிகாரியாக வரும் ஜான்மகேந்திரன் கவனிக்க வைக்கிறார்.படத்தில் மிகமுக்கியமான ஆலிம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உஸ்பெகிஸ்தான் நடிகர் நன்று. அவருடைய பணிகளுக்கு நடுவில் சமூகவலைதளத்தில் இயங்குகிறார் என்பது இயல்புக்கு மாறானது என்றாலும் விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
அவருடைய உரையாடல்கள், அமெரிக்காவின் அடாவடி லிபியாவின் நிலை,முன்னாள் லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டது எப்படி? என்கிற விளக்கம் ஆகிய ஆழமான விசயங்களைச் சொல்லிச் செல்கின்றன.ஆலிம் குழுவில் இருக்கும் முன்னணிவீரர் கூறும், நாம் ஜெயித்தால்தான் போராளி இல்லையெனில் தீவிரவாதி என்கிற வசனம் முக்கியமானது.
சக்திவேலின் ஒளிப்பதிவில் உஸ்பெகிஸ்தான் காட்சிகள் சிறப்பு.அவருடைய ஒளிப்பதிவுக்கருவியின் விசாலப்பார்வை நமக்கு நல்ல காட்சி அனுபவங்கள்.
சி.சத்யாவின் இசையில் கபிலன் எழுதியுள்ள பனித்துளி பாடல் வரிகள் அழுத்தமானவை. கைகூடாத காதலின் வலிகளை வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் கபிலன்.பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளை மேம்படுத்திக் காட்ட உதவியிருக்கிறது. ஆலிமின் காதல் உணர்வுகளின் போதான பின்னணி இசை இதம்.
தீவிரமாக நியாயம் பேசுகிறவன் தீவிரவாதி, உரிமையையும் தாழ்மையுடன் கேட்பதா? உள்ளிட்ட பல வசனங்களில் இயக்குநரின் சமுதாயக் கோபம் வெளிப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அமைச்சரின் பெட்ரோல் வியாபாரம் மற்றும் அதன் விளைவுகள் ஆகியன அதிர்ச்சியூட்டுகின்றன.
ஏராள வெட்டுகளுக்கு நடுவிலும் தான் எண்ணியதைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சரவணன்.
- தைப்பூசத்தை ஒட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம்தைப்பூசத்தை ஒட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டது.சேலம் ஜாகீர் […]
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலிமதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் ஜாஸ் டிம்பர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால் குடம்,, பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன்தைப்பூசம், பெளர்ணமி திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அழகு குத்தி பால் குடம்,, […]
- திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் வாலிபர் கொலைதிருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் வாலிபரை கொலை செய்த மர்ம நபர்கள் பழிக்குபழியா என திருப்பரங்குன்றம் போலீசார் […]
- இயக்குனர் டி.பி கஜேந்திரன் உடலுக்கு விஜய பிரபாகரன் நேரில் அஞ்சலிசென்னை சாலிகிராமத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான டி பி கஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார் இவரது […]
- சேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் கொடூர கொலைசேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த், தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் […]
- ஈரோடு தேர்தல் மனு தாக்கல் செய்யும் பணி நாளை முடிவுக்கு வருகிறது..!!ஈரோடு இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் முக்கிய வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து […]
- சித்தார்த் படம் தொடக்கவிழாசித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் 5.2.2023 காலை 11மணிக்கு மிக எளிய […]
- “குற்றம் புரிந்தால்”
நீதியை கையில் எடுக்கும் ஹீரோஅமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படம் “குற்றம் புரிந்தால்”. இப்படத்தை நான் சிவனாகிறேன், இரும்பு […] - உடல் எடையை குறைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாஉடல் எடையை குறைக்க சவாலாக எடுத்து குறைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றதுசென்னை தனியார் நட்சத்திர […]
- பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை..!!மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.பிரபல […]
- தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார்… ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டுஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய நடைமுறையில் தமிழ்மகன் உசேன் உச்சநீதிமன்ற உத்தரவை […]
- அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் சேலம் கிளை ஆலோசனைக் கூட்டம்அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் (ASM)என்ற சர்வதேச அமைப்பின் சேலம் கிளை தொடங்க ஆலோசனைக் கூட்டம் […]
- நீலகிரி மாவட்டம் அண்ணாமலை கோவிலில் தைப்பூச திருவிழாநீலகிரி மாவட்டத்தின் பழனி என்று அழைக்கப்படும் அண்ணாமலை கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் […]
- உதகை எல்க்ஹில் முருகர் கோவிலில் தைப்பூச திருவிழா…மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகைக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கும் எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் […]