நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் தலைவராக ரமேஷ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை அருகேயுள்ளது நிலையூர் கிராமம் . அங்குள்ள பெரிய கண்மாய் மூலம் நிலையூர்,குத்தியார்குண்டு,கருவேலம்பட்டி,சூரக்குளம்,சொக்கநாதன்பட்டி கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் நிலையூர் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டது.
.இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.ரமேஷ் போட்டியிட்டார்.மேலும் உறுப்பினர் பதவிக்கு கண்ணப்பன்,அய்யங்காளை,விஜயலட்சுமி,சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிட்டனர் .
நடந்த முடிந்த இத்தேர்தலில் விவசாயிகளின் நம்பிக்கை நாயகனாக கூத்தியார்குண்டு ரமேஷ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராமேஷ்க்கு வாக்களித்த அனைத்து விவசாயிகளுக்கும் நிலையூர் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுசார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.