ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படம் பற்றிய மாஸான முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி பீஸ்ட் படத்தில் விஜய்யை தொடர்ந்து, தலைவர் 169 படத்தில் ரஜினியை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளது உறுதியாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் மெகா பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் படத்தை தயாரித்து வருகிறது. இதில் எதற்கும் துணிந்தவன் மார்ச் 10 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படமும் ரிலீசிற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
பீஸ்ட் படத்தின் ரிலீஸ் எப்போது என கேட்டு வந்த ரசிகர்களுக்கு, புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு குஷிப்படுத்தியது சன் பிக்சர்ஸ். அதாவது பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து பாடல் பிப்ரவரி 14 ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தது. இதற்காக அனிருத், நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் மூன்று பேரும் பாட்டை தயார் செய்து, விஜய்யிடம் போனில் பேசவது போலவும், பதிலுக்கு இவர்களை விஜய் கலாய்ப்பது போலவும் ஸ்பெஷலான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்கள்.
இந்த ப்ரோமோ வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை பெற்றது. இதைத் தொடர்ந்து அரபிக் குத்து பாடலுக்கான அடுத்த ப்ரோமோவை பிப்ரவரி 10 ம் தேதி வெளியிட போகிறார்கள் என்றும், இதில் விஜய்யுடன் இருப்பார்கள் என்றும், சிவகார்த்திகேயன் எழுதிய பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடுவது போல் இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் Announcement Alert என்ற வாசகத்துடன் இன்று மாலை 6 மணிக்கு என குறிப்பிட்டு, பெரிய கடிகாரம் சுற்றி வந்து 6 மணியை காட்டுவது போல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் இது தலைவர் 169 அறிவிப்பா அல்லது பீஸ்ட் பற்றிய அறிவிப்பா என ஆர்வமாக கேட்டு வந்தனர். ட்விட்டரில் #Thalaivar169 என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டது.
ரஜினியின் 169 வது படமான தலைவர் 169 படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க போவதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைவர் 169 படத்திற்காக பல டைரக்டர்களின் பெயர்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், சிவகார்த்திகேயன், விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் நெல்சன் திலீப்குமார். எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினியுடன் கைகோர்க்கிறது சன் பிக்சர்ஸ். ரஜினியின் பேட்ட, தர்பார் படங்களை தொடர்ந்து தலைவர் 169 படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார்.
ஏப்ரல் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று தலைவர் 169 படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாம். அதைத் தொடர்ந்து மே மாதம் தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த ஊரில் ஷுட்டிங் துவங்க உள்ளது என்பது விரைவில் முடிவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் பொள்ளாச்சி, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு..!மதுரை மாவட்டம், மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் […]
- இன்று இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள்துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய […]
- கள் விற்பனை செய்தவர்கள் கைது..!மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் […]
- திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைதுதிருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC […]
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]