இலங்கையில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்சே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நூலன்ட் இலங்கைக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ளார். இவர் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், இவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஷ் வரவேற்றார். பின்னர் அவர் கூறுகையில், அதிபர் ராஜபட்சே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இடையிலான கூட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 25) நடைபெறவுள்ளது என்று அமெரிக்க பிரதிநிதி விக்டோரியாவிடம் கூறினேன் என்றார்.
இதுகுறித்து விக்டோரியா நூலன்ட் கூறுகையில், ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அதிபர் ராஜபட்சே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை நாங்கள் வரவேற்கிறோம்’ என்றார்.
ராஜபட்சே 2019ஆம் ஆண்டு நவம்பரில் அதிபராக பதவியேற்றார். அதன் பிறகு இதுவரை ஒரு முறை கூட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அதிபர் ராஜபட்சேவை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாதம் அதிபர் மாளிகை முன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழ் சமூகத்தினரின் அரசியல்சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவை திருத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்தியா-இலங்கை இடையே 1987ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தனே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. அதில், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

- எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை கண் இமைபோல பாதுகாக்கிறது- ஜெயபிரதீப் அறிக்கைகண் இமைபோல எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை பாதுகாப்பதாக ஓபிஎஸ் மூத்த மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்பொதுக்குழுவுக்கு […]
- குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவருடன் சந்திப்பு மனநிறைவாக இருந்தது-ஸ்டாலின்இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவராக ஜெதீப் தன்கர் […]
- பிஜேபியின் முக்கிய பொறுப்பிலிருந்து நிதின் கட்காரி நீக்கம்பிஜேபியின் முக்கிய பொறுப்பிலிருந்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நீக்கப்பட்டுள்ளார்.பாரதியஜனதா கட்சியின் உயர்நிலை கொள்கை வகுக்கும் அமைப்பான […]
- ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மிக எழுச்சியோடு செயல்படும் – கோபாலகிருஷ்ணன் எம்பி பேட்டிஅதிமுக ஓபிஎஸ் தலைமையில் மிக எழுச்சியோடு செயல்படும் என முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் பேட்டி.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கின் […]
- மதுரையில் தென்மண்டல அளவிலான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள்மதுரையில் தென்மண்டல அளவிலான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம். பல்வேறு மாநிலங்களில் […]
- மதுரையை காப்பாற்ற வேண்டும் -சு.வெங்கடேசன் எம்.பிமதுரையை காலநிலை மாற்றத்தின் ஆபாயத்திலிருந்து காப்பற்றவேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி பேச்சுமதுரை அமெரிக்கன் கல்லூரியில் நிகழ்ச்சி […]
- திருப்பரங்குன்றத்தில் ஆவணிமாதபிறப்பை முன்னிட்டு அஸ்ரத் தேவருக்கு சிறப்பு பூஜைதிருப்பரங்குன்றத்தில் ஆவணி மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் முதல் […]
- கட்சியை அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முடியாது -ஓபிஎஸ்அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா […]
- ஐகோர்ட்டு கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்- ஜெயக்குமார்…பொதுக்குழு செல்லாது என ஜகோர்ட் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என முன்னாள் அமைச்சர் […]
- ஜெ.நினைவிடத்தில் கண்ணீர் விட்ட ஓபிஎஸ்…பொதுகுழு வழக்கு தீர்ப்புக்கு பின் ஜெ.நினைவிடம் சென்ற ஓபிஎஸ் கண்ணீர்விட்டு மரியாதை செலுத்தினார்.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் […]
- தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிமுகவின் தலைமை குறித்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் […]
- உயர்நீதிமன்ற தீர்ப்பு. ஆண்டிபட்டியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்…அதிமுகவில் நிலவிய பிரச்சனையில் உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அதில் அதிமுகவில் ஜூன் 23ஆம் […]
- ஜவான் படத்தில் விஜய்சேதுபதி.. அவரே உறுதி செய்துள்ளார்!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களையும் […]
- இபிஎஸ் சதி முறியடிப்பு- இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழுஇபிஎஸ் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும்,இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழு கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை […]
- தர்மம் வென்றது… உற்சாக கூச்சலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்…அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்றும் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை […]