• Fri. Apr 26th, 2024

எச்சரிக்கை.. இந்த 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது!

By

Sep 1, 2021 , ,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்பிருப்பதாகவும்; ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக தோகைமலை, ஏத்தாப்பூரில் தலா 4 செ.மீ. மழை மற்றும் நாமக்கல், பென்னகரம், கரியாப்பட்டி, நாகையில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *