• Fri. Apr 26th, 2024

மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல் காந்தி

ByA.Tamilselvan

Dec 11, 2022

தனது நடைபயணத்தில் 3 மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல்காந்தி . மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார்.மாணவிகளிடம் கல்வி, எதிர்கால லட்சியம் குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார். அப்போது 3 மாணவிகளும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசையாக இருப்பதாக ராகுல் காந்தியிடன் வெள்ளந்திதனமாக கூறினர். மாணவிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
3 மாணவிகளையும் ராகுல்காந்தி தன்னுடன் அழைத்துச்சென்றார். விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர். 3 மாணவிகளும் ராகுல்காந்தியுடன் இணைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். சுமார் 20 நிமிட பயணத்துக்குப் பிறகு மாணவிகள் விடைபெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *