• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு வணிகர் சங்கம் மேற்கு மாவட்டம் சார்பில் போராட்டம்

Byஜெ.துரை

Jan 10, 2023

டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை கைவிடக் கூறி தமிழ்நாடு வணிகர் சங்கம் மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து சட்டையில் பேட்ச் அணிந்து போராட்டம்.
சென்னை பெரிய மேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 2ம் தேதி அன்று தமிழ்நாடு வணிகர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில தலைவர் விக்கிரமராஜா நான்கு கட்ட போராட்டத்தை அறிவித்திருந்தார் அதில் முதற்கட்டமாக 10/01/23 அன்று நடக்க இருப்பதாகவும் கூறினார். அதில் முதற்கட்டமாக சங்க கொடியை ஏற்றி போராட்டத்தை தொடங்கினார்கள்.


” மத்திய மாநில அரசுகளே ஜிஎஸ்டி சட்ட விதிகளை எளிமையாக்கி விடு. டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்து விடு. என்ற வாசகத்துடன் கூடிய பேட்ச்சை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தென் சென்னை மாவட்ட தலைவர் எம் ஆர் பன்னீர்செல்வம், என்.பி.பாலன் தலைமை தாங்கினார்.
மற்றும் கேகே நகர் தொகுதி செயலாளர் எஸ் ஜீவானந்தம்,அந்தோணி, ஞான செல்வம், அகஸ்டின், ராம்ஜித், ஆர்.வி கணேசன், பால் ஆசிர்,ஆனந்தராஜ், இளைஞர் அணி கார்த்திகேயன் மற்றும் மாவட்டத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.