பாலிவுட்டில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா அமெரிக்க மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார்.
தற்போது அதே வழியைப் பின்பற்றி குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா! சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூட குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பிரியங்கா சோப்ரா சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வாடகைத்தாய் மூலம் தானும் தனது கணவர் நிக் ஜோனஸும் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், இந்த மகிழ்ச்சியான தருணத்தை குடும்பத்துடன் கொண்டாடி வருவதாகவும் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். அவரது கணவர் நிக் ஜோனஸும் தனது சமூக வலைத்தளத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதை தெரிவித்துள்ளார்.
குழந்தை பெற்றுக்கொண்டுள்ள தம்பதிக்கு பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பிரியங்கா சோப்ரா சமூக வலைத்தளத்தில் தனது பெயருடன் இருந்த கணவர் பெயரை நீக்கினார். இதனால் இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்று செய்தி பரவியது. ஆனால் அதனை இருவரும் பின்னர் மறுத்திருந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
பிரியங்கா கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். பாலிவுட்டில் இயக்குனர் கரண் ஜோகர் வாடகைத்தாய் மூலம் திருமணமே செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொண்டார். இதே போன்று பாலாஜி டெலிபிலிம் நிறுவனர் ஏக்தா கபூர் மற்றும் அவரது சகோதரன் துஷார் ஆகிய இருவருமே திருமணமே செய்து கொள்ளாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் கூட தனது மூன்றாவது குழந்தையை வாடகைத்தாய் மூலமே பெற்றுக்கொண்டார்.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]