ஆஸ்கார் விருது! உலக திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும்! அத்தகைய ஆஸ்கார் விருது பட்டியலில் ஜெய் பீம், மரக்கார்: அரபிக்கடலின் சிங்கம்! உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் இடம்பெற்று, உலக சினிமாவை தென்னிந்தியா பக்கம் திருப்பியுள்ளது!
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. இருளர் பழங்குடி மக்கள் வாழ்க்கை குறித்த உண்மை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலவிதமான விமர்சனங்களை பெற்றது. பல்வேறு விருதுகளிலும் பரிந்துரைக்கப்பட்டு வரும் ஜெய்பீம்.
ஐஎம்டியில் 9.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததோடு, ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகளும், இயக்குநரின் பேட்டியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது! இந்த சாதனையை படைத்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த அங்கீகாரத்தை ஜெய் பீம் படம் கொடுத்துள்ளது. .
மரக்கார்: அரபிக்கடலின் சிங்கம்! பிரியதர்ஷன் இயக்கிய இந்திய காலகட்ட போர்த் திரைப்படம். 16 ஆம் நூற்றாண்டின் கோழிக்கோடு, ஜாமோரின் கடற்படையின் அட்மிரல் முஹம்மது அலி என்ற நான்காவது குஞ்சாலி மரக்கரை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். அனி சசியை வைத்து பிரியதர்ஷன் இப்படத்தின் திரைக்கதையை அமைத்தார். மரக்காராக மோகன்லால் நடித்திருந்த இப்படத்தில், அர்ஜுன் சர்ஜா, சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், நெடுமுடி வேணு, சித்திக், முகேஷ் மற்றும் பிரணவ் மோகன்லால் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்! மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியான இப்படமும் பல்வேறு விமர்சனங்களை பெற்றது..
ஆஸ்கார் விருது!
இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பட்டியலில் சர்வதேச அளவில் 276 படங்கள். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த படங்களுக்கான வாக்கெடுப்பு வரும் 27ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் பீயிங் தி ரெக்கார்டோஸ், பெல்பாஸ்ட், கேண்டிமேன், கோடா, எண்கான்டோ, ஹவுஸ் ஆப் குச்சி, ஸ்பைடர் மேன் நோ வே ஹோம், வெஸ்ட் சைட் ஸ்டோரி, தி பவர் ஆப் த டாக் உள்ளிட்ட படங்களும், ஜப்பானின் டிரைவ் மை கார், இத்தாலியின் தி ஹேண்ட் ஆப் காட், ஈரானின் எ ஹீரோ, நார்வேயின் தி வொர்ஸ் பர்சன் இன் தி வேர்ல்ட் போன்ற படங்களும் இடம்பெற்றுள்ளன.
94வது ஆஸ்கர் விருது விழா
94வது ஆஸ்கர் விருதுகளின் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வரும் பிப்ரவரி 8ம் தேதி நாமினேஷன் அறிவிக்கப்படும். வரும் மார்ச் 27ம் தேதி விருது வழங்கும் விழா ஹாலிவுட்டின் டோல்பை திரையரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழா ஏபிசி தொலைக்காட்சியின் மூலம் 200 பகுதிகளில் உலகெங்கிலும் ஒளிபரப்பாக உள்ளது என்பது கூடுதல் தகவல்!
- அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் […]
- ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் […]
- காங்கிரஸ் குறித்து பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டூவிட்குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்கடந்த சில தினங்களுக்கு […]
- ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்- என மத்திய ரெயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் […]
- முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் […]
- இரு ரயில்வே சங்க நிர்வாகிகளுக்கிடையே அடிதடிமதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு.’சதர்ன் […]
- மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே […]
- காங்கிரஸ் கட்சிக்கு அவமானமாக இல்லையா…? குஷ்பு சாடல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். […]
- கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமிதமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
- வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதிவாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட […]
- பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த […]
- பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்புவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் […]
- மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். […]
- முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 […]
- திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]