வருகின்ற டிசம்பர் மாதம் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாடு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டு வரும் பாம்பன் பாலத்தின் முதல் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.
குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் பிரதமர் சந்திப்பார் என கூறப்படுகிறது.