• Sat. Apr 27th, 2024

சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

ByA.Tamilselvan

Oct 28, 2022

சென்னை-மைசூரு இடையே நவ.11ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலான வந்தேபாரத் ரயிலை துவக்கி வைக்க பொங்களூருக்கு பிரதமர் மோடி வருவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூரு வருகிறார். அவர் அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வருகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைக்கிறார். அதே விழாவில் கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்க இருக்கிறார். அதன் பிறகு பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் அன்றைய தினம் பிரதமர் மோடி இந்தியாவின் 5-வது மற்றும் தென்இந்தியாவின் முதல் அதிவேகமாக செல்லும் சென்னை – மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *