• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஜி-20 உச்சி மாநாட்டில் அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

ByA.Tamilselvan

Nov 14, 2022

ஜி-20 உச்சி மாநாடு நாளை தொடங்குகிற நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனா அதிபர் ஜி.ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசி வருகிறார். மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.