ஆண்டிபட்டி அருகே விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். கோடிகளில் உற்பத்தி பாதிப்பு .கஞ்சித் தொட்டி திறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி . சுப்புலாபுரத்தில் 3000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு , போனஸ் ,இன்சூரன்ஸ் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அதேபோல ஜக்கம்பட்டி பகுதியிலும் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர் .
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே கடந்த 2021 ஜனவரி மாதம் போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த 2022 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது . இந்நிலையில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படாததால் டி . சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டியில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது . போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக கடந்த நான்காம் தேதி டி. சுப்புலாபுரம் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது .


இதையடுத்து நேற்று முன்தினம் மாலை இரண்டாம் முறையாக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுந்தரலால் காவல்துறை ஆய்வாளர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்ளுக்கிடைய பேச்சுவார்த்தை நடைபெற்றது . இதில் அனைத்து கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர் . 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்படவில்லை . இதனால் இரண்டாம் முறையாக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது . இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற 8 ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து நடைபெற்று வரும் ஸ்டிரைக்கின் காரணமாக இப்பகுதி உள்ள ஐந்தாயிரம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கஞ்சித் தொட்டு திறக்கும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில் வேறு தொழில் எங்களுக்கு தெரியாததால் முதலாளிகள் எங்கள் வயிற்றில் அடித்து வருகின்றனர் ஏற்கனவே கடந்த முறை கூலி ஒப்பந்தத்தை தருவதாக கூறிவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்காமல் எங்களை வேலை வாங்கினர் அரசு நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]