• Thu. Apr 25th, 2024

மதுரையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

Byp Kumar

Dec 15, 2022

மதுரை புதூர் மின்வாரிய தலைமை அலுவலக முன்பாக தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஒப்பந்த மின்வாரிய ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது.
ஒப்பந்த மின்வாரிய ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரி இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்க வந்திருந்தனர். காவல்துறையினர் உண்ணாவிரதம் செய்ய அனுமதி வழங்காததால் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, கொடைக்கானல், திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்


இவர்கள் அனைவரும் 19 ஆண்டு காலமாக தொடர்ச்சியாக மின்வாரிய ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருவதாகவும் அரசு அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் அடையாளம் கண்டு நேரடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரி விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *