• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாப்புலர் பிரண்டு தலைமை அலுவலகத்துக்கு சீல் ..

ByA.Tamilselvan

Oct 1, 2022

பாப்புலர் பிரண்டு அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைப்பு
தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய தஸ்தாவேஜூகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் பாப்புலர் பிரண்டு அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் பாப்புலர் பிரண்டு அமைப்பின் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். நேற்று கோழிக்கோட்டில் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.