கடன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 55 போலி கடன் செயலிகளுக்கு சைபர் கிரைம் போலீசார் தடைவிதித்துள்ளனர்.
புதுச்சேரியில் கடன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த 55 போலி கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ள வேண்கோளில் “கடன் செயலிகள் விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்கவேண்டும் .மோசடியில் ஈடுபடும் கடன் செயலிகள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.