தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.
சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் எடுத்துச் செல்லப்பட்டது.