போலீஸ்காரர் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது மனைவி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.
நாகர்கோவில் அருகே மேல சரக்கல் விளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கம் இவர் நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:எனது கணவர் ஜெகநாதன் களக்காடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு எனது கணவரை சிலர் கூட்டிக்கொண்டு போய் கொலை செய்துள்ளனர். இந்த கொலை குடிபோதையில் செய்ததாக ரவுடிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து எனது கணவரை கூட்டிக்கொண்டு போனவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஏழு நாட்கள் கழித்து பல திட்டங்கள் தீட்டி பின்பு எனது மகனை காணவில்லை கண்டுபிடித்து தரும்படி கடமைக்காக எனது மாமியார் ஒரு புகார் மனு ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
எனது கணவர் கொலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் என பல இடங்களில் அலைந்து போராட்டங்களுக்கு பிறகு தான் இறந்தது எனது கணவர்தான் என பேஷன் இம்போசிங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை இதுவரை தெரியவில்லை பின்பு ராஜக்கமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் இறந்துபோனது ஜெகநாதன் இல்லை இது வேறு ஒருவருடைய உடல் என எங்களிடம் கூறி வழக்கை திசை திருப்பி விட்டார். எனது மாமியாரும் மாமனாரும் எனது கணவர் இல்லை என்று அது வேறு ஒரு உடல் பாகம் என என்னிடம் பல பொய்களைச் சொல்லி நாடகமாடி கொலை வழக்கை குற்றவாளிகளுக்கு சாதகமாக திசை திருப்பினார்.
பின்பு எனது கணவரை காணவில்லை என வழக்கு பதிவு செய்து வழக்கை முடிப்பதற்காக அவரின் உடல் பாகத்தை உரக்கிடங்கில் அனாதை பிணமாக அடக்கம் செய்தனர். பின்பு நான் மதுரை கோர்ட்டில் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தேன் அந்த வழக்கை முடிப்பதற்காக மட்டும் கொலை வழக்கு நம்பர் பதிவு செய்து அப்படியே கிடப்பில் தள்ளினர்.
எனது கணவர் இறந்தது 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி இப்போது இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டாம் ஆண்டு ஆகிறது எனது கணவர் இறந்து 10 வருடம் ஆன நிலையில் இதுவரை கொலையாளிகளுக்கு சம்மன் கொடுக்கவே இல்லை ஒருமுறைகூட வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரவில்லை.
திட்டமிட்டு வழக்கை கிடப்பில் தள்ளியுள்ளனர் எனது கணவர் வீட்டாரை விசாரணை செய்வதற்கு பல முறை புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.இந்தக் கொலையில் மர்மம் மறைந்துள்ளது நான் கூறுவதை தயவு செய்து கருத்தில் கொண்டு இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட மாறு கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன் பத்து வருடம் கடந்த நிலையிலும் எனது கணவரின் தலைப்பாகம் என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை ஆகவே எனது கணவரின் தலைப் பாகத்தை என்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் அதனை எனது கணவரின் ஊரில் அடக்கம் செய்வதற்கு பாதுகாப்புத் தர வேண்டும் எனஅந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
- மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை […]
- ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது […]
- குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் […]
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சிநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் […]
- தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், […]
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]