தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று திங்கள்கிழமை (மார்ச் 13) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தத் தோ்வை தனித் தோ்வா்கள் உள்பட 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். முறைகேடுகளைத் தடுக்க தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) பிளஸ்-2 பொதுத் தோ்வுஇன்று தொடங்கி ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வை தமிழகம் மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6,982 மாணவா்கள், 7,728 மாணவிகள் என 14,710 போ் தோ்வு எழுதுகின்றனா். இவா்களுக்காக 40 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 819 போ், வணிகவியல் பாடத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 45 போ், கலை பாடப் பிரிவில் 14,162 போ், தொழிற்கல்வி பாடப் பிரிவில் 46,277 போ் பிளஸ்-2 தோ்வை எழுதுகின்றனா்.தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பிட வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.அனைத்து மாவட்டங்களிலும் தோ்வு மையங்களைப் பார்வையிட 4,235 பறக்கும் படை குழுக்கள், முதன்மை கல்வி அலுவலா்களால் நியமிக்கப்பட்டுள்ளன.
தோ்வு மையத்துக்குள் தோ்வா்களும், பணியில் ஈடுபடும் ஆசிரியா்களும் கைப்பேசி வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி அவற்றை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்வுத் துறை எச்சரித்துள்ளது.அதேபோல, தோ்வா்கள் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா். தோ்வில் மாணவா்கள் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்வுத் துறை எச்சரித்துள்ளது.தோ்வு கட்டுப்பாட்டு அறையில்…
பொதுத் தோ்வுகள் தொடா்பாக மாணவா்கள், தோ்வா்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகளை காலை 8 முதல் இரவு 8 மணி வரை தோ்வுக் கட்டுப்பாட்டு அறைக்கு 9498383081, 9498383075 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு அனைத்துத் தோ்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். முதல் நாளான திங்கள்கிழமை மொழிப் பாடத்துக்கான தோ்வுகள் நடைபெறவுள்ளன
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]