மூணாறில் பிரபலமடைந்து வரும் ‘படையப்பா’ என்றழைக்கப்படும் வயதான ஆண் காட்டு யானையை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.
கேரள, இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அமைந்துள்ளது. அழகிய நகரமான இங்கு, எங்கு பார்த்தாலும் வளைந்து நெளிந்து செல்லும் ரோடுகள், இரு புறமும் பச்சை பசேல் என தேயிலை தோட்டங்கள் நம்மை வரவேற்கும். இவைகளுக்கு மத்தியில் அவ்வப்போது தவழ்ந்து வரும் முகில்கள் கூட்டம் கண்களுக்கு விருந்து படைக்கும். இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். மிகவும் அமைதியான சூழல் நிலவுவதால், பல்வேறு வெளிநாட்டவர்களும் இங்கு பல மாதங்கள் தங்கிச் செல்கின்றனர். அப்படி சிறப்பு வாய்ந்த இந்த மூணாறில் ‘படையப்பா’ என்ற பெயர் பிரபலமடைந்துள்ளது. யார்? அந்த படையப்பா…! என விசாரித்த போது…சில உண்மைகள் நமக்கு தெரியவந்தது. சமீபகாலமாக மூணாறு நகருக்குள் தன்னந் தனியாக கம்பீரமாக வலம் வரும் வயது முதிர்ந்த ஆண் காட்டு யானை பெயர் தான், படையப்பா. மற்ற யானைகளை காட்டிலும் இது மிகவும் புத்திசாலி. ஆனால் மூர்க்கத்தனம் அதிகம். யாரையும் தன்னிச்சையாக எதிர்க்கும் குணம் கொண்டது. இதனால் படையப்பா..வை சிலர் எங்கு கண்டாலும் தலைதெறிக்க ஓட்டம் பிடிப்பர். பசியெடுக்கும் நேரத்தில் நகரில் உள்ள ஏதாவது ஒரு கடைக்குள் புகுந்து பழங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லும். கடைக்காரர்கள் இதை பெரிதாக நினைக்க மாட்டார்கள். இரவு நேரத்தில் பூட்டி கிடக்கும் கடையை சேதப்படுத்தி தனக்கு தேவையானதை எடுத்து பசியாரும். பிறகு
‘ஹாயாக’ நடந்து மூணாறு – உடுமலைப்பேட்டை ரோட்டில் உள்ள வாகுவாரை எஸ்டேட் பகுதிக்குள் தஞ்சமடைந்து விடும். மற்ற காட்டு யானைகளுடன் இது செல்லாது. மூணாறு வரும் சுற்றுலா பயணிகள் இந்த படையப்பாவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என ‘தவம்’ கிடப்பது தான் ஹைலைட்டான விஷயம்.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]