• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ராணி எலிசபெத் மரணத்தை கொண்டாடும் மக்கள்

ByA.Tamilselvan

Sep 9, 2022

இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.உலக தலைவர்கள் உள்ளிட்ட பலர் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது மரணத்தை சிலர் கொண்டாடி வருகின்றனர். பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின் அடையாளமான எலிசபெத்குடும்பம் தற்போது நிறவெறி உயிர்ப்புடன் இருப்தற்கான விதையை போட்டவர்கள். உலக முழுக்க அடிமைகளை ஏற்றுமதி,இறக்குமதி செய்தது. ஆசிய ,ஆப்ரிக்க நாடுகளில் கொள்ளை அடித்தது. இந்தியாவை அடிமையாக்கியது. இலங்கையில் தமிழர்களை தேயிலை தோட்டத்தில் அடிமைப்படுத்தியது என எலிசபெத் குடும்ப ஆட்சிக்கு பல கருப்பு பக்கங்கள் உள்ளன.