• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் மகாசிவராத்திரி மறுபூஜை விழா..,

ByKalamegam Viswanathan

Feb 24, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாண்டம்மன்
கோவில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி விழா கடந்த வாரம் சிறப்பாக நடந்து முடிந்ததை ஒட்டி பெரியகோவிலில் மறு பூஜை நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற்றது.

மறு பூஜை விழாவை முன்னிட்டு எட்டும் இரண்டும் பத்துதேவர்கள் முன்னிலையில் பெரியபூசாரி தலைமையில் ஐந்து பூசாரி பெருமக்கள் பூஜை நடைபெற்றது அதில் கொப்பிலிபட்டியை சேர்ந்த பொட்டுலுப்பந்தி தேவர் வகையறா பொட்டுலுப்பட்டி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் தொழிற்சங்க மாவட்ட தலைவர் பொன்.ஆதிசேடன் சார்பாக கோவில் முன்பு மறுபூஜைகள் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் உறவுகளுக்கும் அன்னதான ஏற்பாடு செய்யப்பட்டது அன்னதானத்தை பெரியதேவர் காசிமாயன் தொடங்கிவைத்தார்.

இதில் ராமர் தர்மலிங்கம் காசிராஜா ஜெயபிரியா சுபாஷ் ஜெயந்தி அன்புராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து சித்தாலை பெ அன்பழகன் லட்சுமி காதணிவிழா முத்துப்பட்டி பொட்டுலுபட்டி நீதிபதி பாண்டியம்மாள் திருமணவிழா மேலநாச்சிகுளம் பெ மூர்த்தி தங்கபாண்டியம்மாள் திருமண விழா உசிலம்பட்டி காசி இல்லவிழா ஆணையூர் ஜெ பாலமுருகன் ஜெயசித்ரா காதணி விழா உசிலம்பட்டி ஜோதி புதுமனை விழா ஆகிய விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பு செய்யப்பட்டது.