தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப் பதிவு நேற்று(30.4.2023) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறு ஜானகி ராமசந்திரன் கல்லூரியில் நடைபெற்றது.
தேர்தலுக்கு முதல் நாள் இந்த தேர்தலில் பிரதான அணிகளாக போட்டியிட்ட இரண்டு அணிகளும் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு சுமார் 25000ம் வரை அன்பளிப்பு வழங்கியதாக கூறப்பட்டது.
முரளி ராமசாமி அணிக்கு எதிரான அலையும், மன்னன் தலைமையிலான அணிக்கு ஆதரவான அலை இருப்பதாக தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை முடிவில் முரளி ராமசாமி தலைமையிலான அணி அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு காரணம் நேற்றையதினம் வாக்கு சீட்டில் முத்திரை பதித்துவிட்டு அதனை புகைப்படமாக எடுத்து வந்து காண்பித்தால் ரூபாய் 10,000 ம் கொடுப்பதாக முரளி ராமசாமி அணி கூறியதால் உபரியாக கிடைக்கும் பணத்தை இழக்க விரும்பாதவர்கள் அணிமாற்றி வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக தலைவர் வாக்கு சீட்டு கீரீன்ஷாட்டுக்கு 10,000, ஒட்டுமொத்த அணிக்கு வாக்களித்த கீரீன் ஷாட் என்றால் 20,000 ம் வழங்கப்பட்டதால் ஒட்டுமொத்த தேர்தல் முடிவும் மாறியதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது இதனை குறிப்பிட்டு நடந்து முடிந்த தேர்தலில் இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இசக்கி ராஜா வெளியிட்டுள்ள பதிவில்
“அடுத்த நான்கு வருடங்கள் கழித்து இந்த சங்கத்தையும் பணத்திற்காக வாக்களிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.. எனக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.அடுத்த தேர்தலில் பல லட்சம்.. சில கோடிகளை தயார் செய்து உங்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்கிறேன்..
ஆனால் இந்த தேர்தலில் எப்படி தலைமை நிர்வாகத்திற்கு ஓட்டு போட்டதை புகைப்படம் எடுத்து காட்டி பணம் பெற்றீர்களோ.. அதைப்போலவே எனக்கு காட்ட வேண்டும்.. நானும் பணம் தருகிறேன்..
உண்மையில் சினிமாவை நேசிக்கும் என் அன்பு சொந்தங்களே எனக்கு வாக்களித்தவர்களே.. என்னை மன்னித்து விடுங்கள் இந்த சினிமாவின் சாபக்கேடு பணம் வாங்கி அடிமை ஆகும் நபர்களால் சங்கமும் தமிழ் சினிமாவும் நாசமாக போய்விட்டது.. தவறான வழியில் வந்து தான் நமது சங்கத்தையும் நமது தயாரிப்பாளர்களையும் காப்பாற்ற முடியும்.. அதை புரிந்து கொண்டேன்..அடுத்த தேர்தலில் சந்திப்போம்
V ராஜா (எ) V இசக்கிராஜா
நேர்மையாக இத்தேர்தலில் போட்டியிட்டு பண முதலைகளிடம் அதற்கு அடிமையானவர்களிடம் தோல்வியடைந்த வேட்பாளர். எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]
- இன்று செவ்வாய் கிரகத்தை முதன் முதலாக சுற்றி வந்த மாரினர்-9 விண்ணில் ஏவப்பட்ட தினம்பூமியை தவிர மற்றொரு கோளைச் சுற்றி வந்த செவ்வாயின் முதலாவது முதல் விண்கலம் மாரினர்-9 விண்ணில் […]
- இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சுதமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக […]
- லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்..,மின்சார வாரியம் எச்சரிக்கை..!மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என […]
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]