தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் (FEFSI) மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “ஒரு தொழிலுக்கு தனி உயிரில்லை. அங்கே உழைப்பவர்களால் மட்டுமே தொழில் உயிர்வாழ்கிறது. உங்களைப்போல உழைப்பவர்களால் தான் இனியும் தொழில் உயிர்வாழும். திரைப்பட படப்பிடிப்பு தளங்களில் நிறைய லைட்மேன்களுடன் பேசி விளையாடியிருக்கிறேன். அவர்களின் உழைப்பு கடுமையானது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் 50, 100 தொழிலாளர்களின் உழைப்பு இருக்கும். அவர்களின் முகம் தெரியாமல் கூட இருக்கலாம். ஒரு வேலை செய்யும்போது அதை புரிந்துகொண்டால் நாம் முன்னேறலாம்.
தொழிலை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். நாம் செய்யும் தொழிலை நன்றாக செய்ய வேண்டும். அதே சமயம் அதை கவனித்து புரிந்துகொள்ள வேண்டும். நிறைய பேர் இயக்குநராக வேண்டும் என வருகிறார்கள்; நடிகராக வேண்டும் என வருகிறார்கள். அதில் சிலர் மட்டும் ஏன் பெரியாளாகிறார்கள்? என்பதற்கு காரணம் அவர்கள் அந்த தொழிலை பார்த்த விதம், புரிந்துகொண்ட விதம். என்றைக்கும் கீழிருக்கும் கூட்டம், கீழேயே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. புரிந்துகொள்ளும்போது அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும்.
சினிமாக்காரர்களுக்கு நிறைய சிக்கல்கள் உண்டு. வருமானம் குறைவாக இருந்தாலும் அதனை சேமித்து வைக்க கற்றுக்கொள்ளுங்கள். அது நம்பிக்கை கொடுக்கும். இங்கிருக்கும் எல்லாமே குகையில் வாழ்ந்த மனிதர் காரிலும், மாட மாளிகையிலும் வாழ்கிறான் என்றால் அதன் மூலதனம் உழைப்பு தான். ஆக உழைப்பை எந்த சிந்தனையில் விதைக்கிறோம் என்பது முக்கியமானது” என்றார்.
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]