• நோயால் மனிதர்கள் சாவதை விட..
பயம், கவலையால் அதிகம் சாகிறார்கள்.
• தெய்வம் அருளைப் பொழியும் விதத்தில்
உள்ளத்தை திறந்து வைத்திருங்கள்.
• இப்போது செய்ய வேண்டியதை
பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது.
• தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள்.
தர்மம் மட்டுமே உண்மை என உணருங்கள்.
• நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு வேதங்களும் சொல்லும் தீர்ப்பு.
நம்பிக்கை மிக்கவனே சிறந்தவன்.