• பிறர் நம்மை தாழ்வாக கருதவோ, நடத்தவோ இடம் அளிக்க கூடாது.
• உண்மை பேசுவதை விரதமாக பின்பற்றுங்கள்.
சத்திய விரதத்தால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள்.
• தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும்
மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது.
• இயற்கையை மதித்து வாழ்ந்தால் எந்த தீமையும் உண்டாகாது.
இது சாதாரண விஷயமல்ல. இதுவே உண்மை ஞானம்.
• ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தால்
வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.