சிந்தனைத்துளிகள்
• பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்…
• நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…
• எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்……
• ஒரு நாள் விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது…
• உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே
வாழ்ந்துகாட்டு உன்னை தேடிவருமளவுக்கு…