• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 29, 2024

மரத்தில் ஏற முடியாத மனிதன்
ஒரு போதும் மரத்திலிருந்து
விழுந்ததில்லை என்று
பெருமை பேசி
கொண்டிருப்பான்..!

எல்லா பறவைகளும்
மழையின் போது ஒரு
உறைவிடத்தை தேடி ஒளிகிறது..
ஆனால் பருந்து மட்டும் தான்
மேகத்துக்கு மேலே பறக்கிறது..
பிரச்சனைகள் பொதுவானது தான்..
ஆனால் சிந்தனையும் செயலும்
உன்னை வித்தியாசப்படுத்திக்
காட்டுகிறது…!

தவறு என்பது..
எது ஒன்றில் இருந்து
நாம் எதையும்
கற்றுக் கொள்ளவில்லையோ
அதுவே..!

தலைவருக்காக
காத்திருக்காதீர்கள்..
கண்ணாடியைப் பாருங்கள்
அது நீங்கள் தான்..!

தயாராவதற்கு தோல்வியடையும் போது..
தோல்வியடைய
தயாராகிவிடுகிறாய்..!