சிந்தனை துளிகள்
பிறர் கடுமையாக விமர்சிக்கும்
போது பொறுமையாக
இருப்பவர்கள் கோழைகள் இல்லை
ஒற்றுமையை விரும்புபவர்கள்.
நேரத்தை வீணடிப்பது பணத்தை
வீணடிப்பதற்கு சமம்.!
பணமும் வேண்டும்..
நல்ல குணமும் வேண்டும் என்ற
நோக்கத்துடன் செயல்படுங்கள்.
தோல்வி அடைந்தால்
விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..
முயற்சி கூட செய்யாமல் இருப்பது
மாபெரும் தோல்வி.!
உங்களின் எண்ணமும் பேச்சும்..
செயலும் ஒரே மாதிரி இருந்தால்
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
செய்யும் வேலையை மகிழ்ச்சியாக
செய்தால்.. வெற்றி மேல் வெற்றி
உங்களை வந்து சேரும்.!