சிந்தனை துளிகள்
இன்னாரைபோல வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட நம்மை போல வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.!
கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளை கொடுக்கும். கஷ்டங்கள் இல்லையென்றால் முன்னேற வேண்டுமென்ற எண்ணமே நமக்கு வராது.
ஓடுகின்ற வயதில் உட்கார நினைக்காதே. உட்காருகின்ற வயதில் நீ நினைத்தாலும் ஓட முடியாது. பிறருக்கு எதையும் கொடுக்க முடியவில்லை என்றாலும் மனதார வாழ்த்துங்கள்.
ஓய்வு எனும் சட்டை மிக சுகமானது. ஆனால் அதை அடிக்கடி உபயோகிக்கக் கூடாது.