• Tue. Mar 24th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

ByA.Tamilselvan

Feb 3, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், அ.தி.மு.க, ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.கவின் எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மனு தாக்கல் 7-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மனு தாக்கல் குறித்தும் மாறுபட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.