• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் மகன் கைது? 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியல்

ByA.Tamilselvan

Oct 4, 2022

சிறுத்தை இறந்த கிடந்த சம்பவத்தில் ஓபிஎஸ் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தை கைது செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்துகிடந்தது. இதனை தொடர்ந்து ரவீந்திரநாத்தின் தோட்டமேலாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். அதற்குள் சிறுத்தை இறந்ததுதொடர்பான செய்தி தீயாய் பரவி விட்டது. ரவிந்திரநாத்தை காப்பாற்ற வனத்துறை முயற்சிப்பதாகவும்,அவரை உடனடியாக கைது செய்யவும் வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று சாலை மறியிலில் ஈடுபட்டனர்.