ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார் . இதுகுறித்து பேசிய அவர் ” எதிர்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக இபிஎஸ் யிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. ஓபிஎஸ் உதவியாளர் மூலம் ஒரு கடிதம் வந்தது,வேறுயாரிடமும் இருந்தும் எந்த கடிதமும் வரவில்லை. ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது.தமிழக அரசின் தீர்மானங்கள் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மக்களை புறக்கணிக்கிறார் என்பது பொருள் என்று கூறினார்.