• Sat. Apr 20th, 2024

மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறப்பு

Byகுமார்

Sep 25, 2021

இந்தியா முழுவதும் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை திறக்கப்பட்ட நிலையில், கேரளாவில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 4ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் 5 முதல் 12ம் வகுப்பு வரையும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. பள்ளிகள் திறப்புக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே, சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *