மதுரை மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்தாண்டு நடைபெறும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனவும், கலப்பின மாடுகளுக்கு டோக்கன் கொடுக்க மாட்டாது என தெரிவித்தார்.
மேலும் அவர் திமுக ஆட்சியில் ஜல்லிகட்டு முறையாக நடத்த அனுமதி பெற்று தரப்பட்டது எனவும், நாட்டு மாடு இனங்களை அதிகபடுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.