மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் என்ற சர்வதேச சட்ட நிறுவனம்சார்பில் நடிகர் கே.பாக்கியராஜூக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் என்ற சர்வதேச சட்ட நிறுவனம் மற்றும் உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் அறிக்கை என்ற சட்ட இதழ்களை வெளியீடு செய்த இரு தன்னார்வ அமைப்புகளும் தங்களின் 15-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடினர்.
இதை முன்னிட்டு மனித உரிமைகள் தினமான நேற்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையத்தின் தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான டாக்டர்.எஸ்கே சாமி தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோ.இரவிகுமார் முன்னிலையில், முன்னாள் மேயர் சைதை சா.துரைசாமி, திரைப்பட இயக்குனர் கே.பாக்கியராஜ் உள்ளிட்ட உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையம் சார்பில் விருதுக்கு தேர்வானவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


இதில் இந்திய இராணுவ வீரர்கள், தமிழ்நாடு காவல்துறையினர், தமிழ்நாடு மாநில தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட மூன்று இசை வாத்தியக் குழுக்களும் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உலக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மீட்பு மையத்தின் 15 வது ஆண்டுவிழா மற்றும் மனித உரிமைகள் தின கொடி வகுப்பு பேரணியில் கலந்து கொண்டனர்.
மேளதாளத்துடன் துவங்கிய பேரணி விவேகானந்தர் அரங்கம் சென்றடைந்தது. அங்கு மனித உரிமைகளை காப்போம் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, உலக மனித உரிமைகள் ஆணையம் சார்பில் விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, மனித உரிமைகள் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
மனித உரிமைகளை காக்க போராடியவர்களுக்கும், தற்போது இந்திய தேசத்தை பாதுகாத்து வரும் முப்படை வீரர்கள், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவராலும் சக மனிதனின் உரிமைகளை காக்க நினைக்கும் அவரவர் ஒப்பற்ற தியாகம் கலந்த சேவைகளை சமூகத்தில் மென்மேலும் வளர்த்து பாதுகாப்பதே முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]