மதுரை மாநகராட்சிக்கு, ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சார்பில் மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிக்கு ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணங்களை மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங்கிடம் வழங்கினர். இந் நிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 5. 60 லட்சம் மதிப்புள்ள 186 ரத்த அழுத்தமானிகள், ரத்த சர்க்கரை அளவீடு கருவிகள், 13,470 குளுக்கோஸ் ஸ்டிரிப்புகள் உட்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களை பணியாளர்களுக்கு மேயர், கமிஷனரிடம் இந்நிறுவனத்தினர் வழங்கினார்.