• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

காவல் சீருடையில் பாஜகவில் இணைந்த அதிகாரிகள் சஸ்பெண்ட்..!

Byவிஷா

Jan 4, 2024

நாகை மாவட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், காவல்சீருடையில் பா.ஜ.க.வில் இணைந்த இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
“என் மண், என் மக்கள்” என்ற பெயரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைபயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின்போது காவல்துறை சீருடை அணிந்து 2 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.